வவுனியா, குருமண்காட்டில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை திருடப்பட்டுள்ளது.
புதூர் நாகதம்பிரான் கோவில் வருடாந்த பொங்கல் விழாவிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையிலேயே இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக அந்த வர்த்தகர் தெரிவித்தார்.
பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
திருடர்கள் பொருட்களை திருடும் வரை எமக்கு எவ்வித சத்தமும் கேட்கவில்லை. எனினும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் வீட்டினுள் யாரோ நடமாடுவதைக் கண்டு மற்றவர்களை எழுப்பியதாகவும் தெரிவித்த வர்த்தகர், தம்மால் எவரையும் பிடிக்கமுடியவில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தேடுதலில் ஈடுபட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக