முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என புத்திஜீவிகள் அறிவித்துள்ளனர்.
நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்சினைகளுக்கு சரத் பொன்சேகாவிடம் தீர்வு கிடையாது எனவும் இதனால், சரத் பொன்சேகாவினால் அரசியல்களத்தில் நீடித்து நிற்க முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவின் கொள்கைகள் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிய தெளிவுடன் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளின் ஆதரவு சரத் பொன்சேகாவிற்கு தொடர்ந்தும் கிடைக்காது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக