//]]>3

வியாழன், 19 ஏப்ரல், 2012

Youth hacked to death in Trincomale​e தமிழ் இளைஞர் வெட்டிப் படுகொலை



The body of a young man who had been hacked to death was recovered from a home garden at Aiyanagar in Trincomalee at 10.20 pm last night.



திருகோணமலை ஐயனான்கேணி பிரதேசத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய் யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்படுகொலை சம்பவம் நேற்று இரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை பொலிஸார் குறிப்பிட்டனர்.
வைரவர்கோவில் வீதி பாலயூத்து பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஈஸ்வரதாசன் கேதீஸ்வரன் என்ற இளைஞரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த திருகோணமலை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக