//]]>3

வியாழன், 19 ஏப்ரல், 2012

slbc யின் சந்தைப் படுத்தல் பணிப்பாளர் வாகன விபத்தில் பலி



பிரபல ஒலிபரப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளருமான நுரானியா ஹசன் வாகன விபத்தொன்றில் மரணமடைந்துள்ளார்.

அனுராதபுர பிரதேசத்தில் லொறி ஒன்றும் வான் ஒன்றும் மோதிக் கொண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வாகன விபத்தில் மேலும்  6 பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களின் வாகனம், ரம்பாவ பகுதியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நுரானியா ஹசன் உயிரிழந்துள்ளார்.

நுரானியா ஹசன், வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளராகவும், ஒலிபரப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்த சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்கள் பயணமாகியுள்ளனர். இவர்கள் சென்ற வாகனமே இன்று அதிகாலை 4.30 மணியளவில் ரம்பாவ பகுதியில் லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் நூரானியா ஹசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக