//]]>3

வெள்ளி, 30 மார்ச், 2012

மணிரத்னம் இயக்கி வரும் புதியபடம் கடல்.

ராவணனுக்கு பிறகு மணிரத்னம் இயக்கி வரும் புதியபடம் கடல். இப்படத்தின் நாயகனாக கார்த்திக் மகன் - கவுதமும், அவருக்கு ஜோடியாக சமந்தாவும் நடிக்கின்றனர். 


கவுதமின் அப்பாவாக மணிரத்னத்தின் ஆஸ்தான நாயகனான அரவிந்த்சாமி நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அரவிந்த்சாமி நடிக்கும் படம்  இது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கனவே ராஜீவ் மேனன் மணிரத்னத்தின், பம்பாய் மற்றும் குரு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்கள் இருவரும் இணையும் மூன்றாவது படம் கடல்

நாயகன், நாயகி தெரிவு பெயர் வைப்பதில் குழப்பம் என கடந்த ஓராண்டு காலமாக இழுபறி நிலையில் இருந்த கடல் படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக கடந்த வாரம் திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு என்ற கடற்கரை கிராமத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கிறிஸ்தவ தேவாலயங்கள் நிறைந்த, செம்மண் பகுதி மணப்பாடாகும். ரொம்பவே அமைதியான சூழலில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மணிரத்னம். மேலும் படத்தின் பாடல் காட்சி உள்ளிட்ட சில காட்சிகளை கடலில் வைத்து படமாக்கி வருகிறார், இதற்காக ஹெங்கொங்கில் இருந்து பிரத்தியேகமான தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைத்துள்ளார். 

மணப்பாடு பகுதியில் படப்பிடிப்பு முடிந்த கையோடு அடுத்தக்கட்ட படிப்பிடிப்பை கேரளா மாநிலம், மூணாறில் நடத்த இருக்கும் மணி, கடல் படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முனைப்போடு வேகமாக இயக்கி வருகிறார்.

மீனவர்களின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் கடல் படத்தில், ஒரு அருமையான காதலையும், சேர்த்து இருக்கிறாராம் மணிரத்னம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக