//]]>3

வெள்ளி, 30 மார்ச், 2012

இருதயக் கோளாறுகள் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு































நாட்டில் ஒவ்வாமை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாகவும் இருதயக் கோளாறுகள் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

நாட்டிலுள்ளவர்கள் அதிக உப்பு பாவனை காரணமாக, உயர் குருதியமுக்கம், இருதயக் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமைக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதிக உப்பு பாவனை, உடற்பயிற்சிகளில் ஈடுபடாமை மற்றும் மதுபான பாவனை காரணமாக உயர் குருதியமுக்கம் ஏற்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

உணவிற்கு அதிகளவில் உப்பை சேர்த்துக்கொள்ளல் உயர் குருதியமுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு காரணமென அமைச்சு தெரிவிக்கின்றது.

மனித உடலுக்குத் தேவையான அளவு உப்பு, உணவு மற்றும் நீரில் அடங்கியுள்ளதாகவும், மேலதிக உப்பு பாவனை அவசியமற்றது எனவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக