3 படத்தை இணையதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஐஸ்வர்யா இயக்கத்தில், தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை கஸ்தூரிராஜா தயாரித்துள்ளார்.
இந்தப் படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் இடம் பெற்ற கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளதால், அதிக எதிர்பார்ப்பு உள்ளதாகவும், இந்த படத்தை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து, இணையதளங்கள் மற்றும் இருவெட்டுகளில் வெளியிட வாய்ப்புள்ளதால், இதனை இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்து, கஸ்தூரி ராஜாவால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து 3 படத்தை இணைய தளங்களில் வெளியிட கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறாமல் படத்தை திருட்டுத்தனமாக இருவெட்டுக்களில் வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், படத்தில் இடம் பெற்ற கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளதால், அதிக எதிர்பார்ப்பு உள்ளதாகவும், இந்த படத்தை சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து, இணையதளங்கள் மற்றும் இருவெட்டுகளில் வெளியிட வாய்ப்புள்ளதால், இதனை இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்து, கஸ்தூரி ராஜாவால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து 3 படத்தை இணைய தளங்களில் வெளியிட கூடாது என தடை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறாமல் படத்தை திருட்டுத்தனமாக இருவெட்டுக்களில் வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக