மியன்மாரில் நடைபெறவுள்ள தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என ஜனாநாயக செயற்பாட்டரும், எதிர்கட்சி தலைவருமான ஆங் சாங் சூகி தெரிவித்துள்ளார்.
கடந்த வார இறுதியில் சுகவீனமடைந்த ஆங் சாங் சூகி, செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைத் கூறியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
நாளை மறுதினம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற இடைத்தேர்தலில் முறைகேடுகள் இடம்பெறலாம் எனவும் ஆங் சாங் சூகி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதாக கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரங்கூனின் தென்மேற்கு பகுதியில் போட்டியிடும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி இந்த தேர்தலில் வெற்றிபெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக