//]]>3

வெள்ளி, 30 மார்ச், 2012

வடமாகாணத்தில் சேவையாற்றும் வைத்தியர்களுக்கு போதியளவு வசதிகள் இல்லை


வடமாகாணத்தில் சேவையாற்றும் வைத்தியர்களுக்கு போதியளவு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென,  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் டொக்டர் நலின் பெரேரா இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் பின்னர் குறித்த பிரதேச வைத்தியசாலைகளில் காணப்படும் குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என எதிர்ப்பார்த்ததாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக கிளிநொச்சி போன்ற வைத்தியசாலைகளில் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கும் விடயம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் கூறினார்.

தற்போது 468 வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றுகின்ற போதிலும் உத்தியோகப்பூர்வ குடியிருப்பு, குடிநீர் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்காமல் அங்கு சேவையாற்றுவது கடினமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக