//]]>3

வியாழன், 21 ஜூன், 2012

திருமலையில் குடும்ப விபரம் திரட்டும் படையினர்


திருகோணமலையின் துறைமுகத்தினை அண்டிய உவர்மலைபகுதியில் வசிக்கும் மக்களின் குடும்ப விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் சிறீலங்கா படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உவர் மலைபகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் படையினர் அங்குள்ளகுடியிருப்பாளர்களின் விபரங்களை திரட்டுவதுடன் புதிதாக யாரும் வந்து குடியிருக்கின்றார்களா என்ற விபரத்தினை மக்களிடம் கேட்டு பதிவுசெய்வதுடன் புதிதாக யாரும் வந்தால் அவர்கள் தொடர்பான பதிவினை மேற்கொள்ளுமாற மக்களுக்கு படையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள மக்களின் குடும்ப அட்டை மற்றும் அடையாளஅட்டை அல்லது படைஅடையாள அட்டை போன்ற ஆள்அடையாளத்தினையும் குடும்ப அடையாளத்தினையும் உறுதிப்படுத்தும் அட்டைகளை வாங்கி பதிவுசெய்வதுடன் குடும்ப எண்ணிக்கையினையும் கணக்கொடுத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக