//]]>3

ஞாயிறு, 27 மே, 2012

யாழில் சினீமாப்பாணியில் இளம்பெண் கடத்தல்



யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பால்ப்பண்ணை வீதியில் பிளசர் ரக மோட்டார் சைக்கிளொன்றில் தந்தையுடன் பயணித்த யுவதி ஒருவர், ஹயஸ் வானில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா அர்ச்சனா அம்பிகா என்ற 23 வயதான குடும்ப பெண் ஒருவரே மேற்படி சம்பவத்தில் இன்று காலை கடத்தப்பட்டவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது…
இன்று காலை குறித்த யுவதியும், தந்தையும் பால்ப்பண்ணை வீதியால் பயணித்துக் கொண்டு இருக்கையில், ஆலடி சுடலை பகுதியில், மறைவில் இருந்து புறப்பட்ட ஹயஸ் வான் மோட்டார் வண்டியின் குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வானில் இருந்து குதித்தவர்கள், தந்தையை தள்ளி தெருவோரத்தில் விழுத்திவிட்டு குறித்த யுவதியை கடத்தி சென்றுள்ளனர்.
கடத்திய வானின் வாகன இலக்கம் யுவதியின் தந்தையால் கோப்பாய் பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக