//]]>3

ஞாயிறு, 27 மே, 2012

வெள்ளைக்காரனை அசர வைத்த இந்திய நாற்று



விஞ்ஞானி ஐசக் நியூட்டனால் போடப்பட்டு கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு வெள்ளைக்காரர்களை வியக்க வைத்துள்ளார் 16 வயதேயான இந்திய நாற்று.
கடந்த 350 ஆண்டுகளாக டைனமிக்ஸ் தியரியில் உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூடஇந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன்.
ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. அப்போது அங்குள்ள பேராசிரியர்கள் இது குறித்து கூறியபோது, இதற்கு விடை காணவே முடியாது என்று கூறினார்கள்.
ஆனால் அதை சவாலாக எடுத்துக் கொண்டார் ராய். பின்னர் அதற்கு விடை காணும் முயற்சியில்இறங்கினார், வெற்றியும் பெற்றார்.
இது இந்தியர்களை தலை நிமிர்த்தும் செய்தியாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக