//]]>3

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

சிட்னியில் இலங்கைத் தமிழ் காதல் பாடல்



முதன் முறையாக ஆஸ்திரேலியா, சிட்னியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் சிலரின் முயற்சியில் உருவான ஓரு இனிமையான “கவிதையேநீ எங்கே”என்ற காதல் பாடல்

தான் உயிராகநேசிக்கும் காதலியை விட்டு பிரிந்து வேறொரு நாட்டில் இருக்கும் காதலனின் தவிப்பைதொனிப்பொருளாக கொண்டமைந்த இந்தப் பாடலின் வரிகளை வினோத் ரெங்கசாமி என்பவர் எழுத, தனக்கென ஒரு தனியிடம்;படைத்து சிட்னியில் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவராக தன்னை நிலைநாட்டி திகலும் மயூகணேசன் என்பவர் அருமையாக இசையமைத்திருக்கிறார். 

இந்தப் பாடலை வினோத்ரெங்கசாமி மற்றும் கிருஷா ரெங்கா ஆகியோர் பாடியிருக்கிறார்கள். கார்த்தி மனோகரன் அவர்கள்பாடலின் காதலி வடிவமேற்று சிறப்பாக தனது பங்கை செய்திருக்கிறார்கள். 

இப் பாடலுக்கு ஒளிவடிவம் விழி பட இயக்குனரும், மண் பட இணை இயக்குனருமான செல்வன் ராஜா என்பவரால் தரபட்டுள்ளது.

அவருக்கு இணையாக சயன் மற்றும் மோகன பிரகாஸ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். 

இப்பாடல் புலம் பெயர்தமிழர்களின் மனதை தொட்ட பாடலாக இருக்கும் என்பதில் ஜயம் இல்லை. 

ஆஸ்திரேலியாஇசிட்னியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களின் இக் கண்ணி முயற்ச்சிக்கு எமது பாராட்டுக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக