//]]>3

புதன், 4 ஏப்ரல், 2012

வெள்ளை வானில் குடும்பத்தர் கடத்தல்



தமிழ்நாடு என பலராலும் அறியப்பட்ட கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவிலுள்ள நவ களனிபுர பகுதியில் இன்று காலை 8 மணியளவில் குடும்பத்தர் ஒருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். 

பாலகிருஷ்ணன் ஆனந்தன் எனப்படும் 45 வயதுடைய குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்று தனது பிள்ளையை பாடசாலையில் இறக்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பாலகிருஷ்ணன் ஆனந்தனை இடைமறித்த நான்கு பேர் அடங்கிய வெள்ளை வான் குழுவினர் அவரை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளனர். 

இந்த கடத்தல் சம்பவம் குறித்து சிவில் கண்காணிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக