//]]>3

புதன், 4 ஏப்ரல், 2012

4 காக பறந்த வாகனம்







வவுனியா, பறநாட்டினகல் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை மதியம் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏ - 9 வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்தும் வவுனியா பகுதியில் இருந்து சென்ற டிப்பர் ரக வாகனமும் வான் ஒன்றுமாக மூன்று வாகனங்களே விபத்தில் சிக்கின.

இதனால் வானின் சாரதியும் மற்றுமொருவரும் பலத்த காயத்திற்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொது வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



(நன்றி தமிழ் மிரர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »