//]]>3

வியாழன், 24 மே, 2012

மனைவியின் நடத்தையால் கணவன் யாழில் உயிரிழப்பு



தனது மனைவி இன்னொரு நபருடன் இருந்தமையைக் கண்டு மனம் உடைந்த கணவன் நஞ்சு விதையை உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை (24) யாழ்.நவாலி வடக்கு பகுதியில் நடைபெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டை தீவை பிறப்பிடமாகப் கொண்ட, நவாலி வடக்கில் வசித்து வரும் ஞாகேஸ்வரன் பாலன் (வயது 34) என்பவரே நஞ்சு விதை உட் கொண்டு உயிரிழந்தவராவர்.
குறித்த நபர் கட்டிட வேலை செய்யும் கூலித் தொழிலாளியாவர். இவர் தனது வேலையின் நிமித்தம் துரப் பிரதேசங்களுக்கு சென்று வருபவர்.
குறித்த ஒருநாள் வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது இவரது பிள்ளையொன்று வீட்டுக்கு வெளியில் விளையாடுவதைக் கண்டு அம்மா எங்கே என வினாவியபோது அம்மா மாமாவோட அறையில் இருக்கிறார் என 5 வயதுச் சிறுவன் கூறியுள்ளார்.
யார்? மாமா என கதவு இடைவெளியினால் பார்த்த போது தனது மனைவி வேறு ஒருவருடன் இருப்தாக் கண்டு ஆத்திரம் அடைந்து குறித்த நபரை விரட்டிச் செல்லும் போது அவர் ஒடித் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் வீட்டுக்கு அருகில் இருந்த அரலி விதையை உட்கொண்டு மரணித்துள்ளதாக, இறந்தவரின் தாயார் பொலிஸாருக்கு கொடுத்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளாதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக