//]]>3

வியாழன், 24 மே, 2012

மேப்பநாய் திருடனைக்கண்டு பிடித்தது -யாழில்



யாழ். சங்கானை நிற்சாமம் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை (18.05.2012) ஒரே இரவில் இரண்டு வீடுகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகநபரை மானிப்பாய் பொலிஸார் இன்று புதன்கிழமை (23) கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்த வரவழைக்கப்பட்ட விசேட மோப்ப நாய்களின் உதவியுடனேயே பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என முதல்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
வடலியடைப்பைச் சேர்ந்த குறித்த நபரிடம் தற்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களைத் தேடி வருகின்றனர். அத்தோடு கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக