//]]>3

வியாழன், 24 மே, 2012

வைத்தியத்திற்கு இடம் இல்லாத யாழ் வைத்தியசாலை



யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் வீதிவிபத்துக்களினால் யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துச் சிகிச்சைப் பரிவில் இடப் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை (24) நிலத்தில் படுக்கவைக்கப்பட்டுள்ளனர்.
யாழில் தினமும் 12 முதல் 15 வரை வீதிவிபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இதன்காரணமாக அதிகளவில் நோயாளர்கள் அதிகரித்துக் காணப்படுகின்றனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் விபத்துக்களுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துச் சிகிச்சைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
விபத்துக்களைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் யாழ்.குடாநாட்டில் நடைபெறும் விபத்துக்களினால் இந்த வருடதத்தில் கால் ஆண்டில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை விபத்துச் சிகிச்சைப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக