//]]>3

திங்கள், 21 மே, 2012

யாழ்ப்பாணத்தில் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்


யாழ். வடமராட்சியின் கெருடாவில் பகுதியில் உள்ள பாடசாலை மாணவன் ஒருவர் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் கெருடாவில் தெற்கைச் சேர்ந்த கோணேஸ்வர குருக்கள் செந்தூரன் வயது 15 என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளர்.
தனியார் கல்வி நிலையத்திற்கு கடந்த (18) சனிக்கிழமை காலை 8 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்ட இவர் பின்னர் வீடு திரும்பவில்லையென்பதோடு கல்வி நிலையத்திற்கும் செல்லவில்லையெனத் தெரியவருகின்றது.
இது தொடர்பில் இவரது பெற்றோரால் வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக