//]]>3

திங்கள், 21 மே, 2012

17 வயது தமிழ் சிறுமி மீது பாலியல் வல்லுறவு


காலி – ஹக்கடுவை பகுதி ஹோட்டல் ஒன்றில் 17 வயது தமிழ் சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இரு சவுதிஅரேபிய பிரஜைகளும் பெண்களை பணத்திற்கு விற்ற குற்றத்தில் இலங்கைப் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவை பொலிஸாரால் இவர்கள் நேற்று (20) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பெண் மருதனை பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் மட்டக்களப்பு – ஒந்தாச்சிமடம் பகுதியைச் சேர்ந்தவராவார். சந்தேகநபர்கள் இன்று (21) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக