//]]>3

திங்கள், 21 மே, 2012

மோட்டார் சைக்களில் விபத்தில் கிராம சேவையாளர் பலி!


வடமராட்சியில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கிராம சேவையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமாகியுள்ளார்.
அத்தோடு படுகாயமடைந்த இரு இளைஞர்களும் மிகவும் மோசமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.45 மணியளவில் இச்சம்பவம் வடமராட்சி குஞ்சர் கடை சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் துன்னாலையைச் சேர்ந்த என்.சிறிக்குமார் வயது 36 என்ற நெல்லியடி கிழக்கைச் சேர்ந்த கிராம சேவையாளரே சம்பவத்தில் பலியானவராவார்.
இவர் வடமராட்சி நோக்கி வந்துகொண்டிருந்தபோதே மேற்படி சம்வம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக