//]]>3

வெள்ளி, 20 ஏப்ரல், 2012

யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம்



யாழ்ப்பாணத்தில் தற்போது குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் ஒரு குற்றத்திற்காக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வருபவர்கள் சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளை வைத்து தப்பித்து அல்லது பிணையில் வெளியில் வருபவர்கள் ஏனைய இடங்களுக்கு செல்வதாகவும் அவ்வாறு செய்பவர்களாலேயே அதிகம்மாக குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி இன்று (20.04.2012)  ஈ.பி.டீ.பி தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தெரிவித்தார் 

மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் நடைபெறும் குற்றச்செயல்களிலும் பார்க்க யாழ்ப்பாணத்தில் குறைவாகவே நடைபெறுவதாகவும் குறிப்பிட்ட அவர் இங்கு பொலிஸ் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதாகவும் கொழும்பைப்போண்று அரசியல்தலையீடுகள் இங்கு இல்லை என்றும் இதனால் தங்களினால் இயல்பாக செயல்ப்படக்கூடயதாக உள்ளது என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக