//]]>3

திங்கள், 4 ஜூன், 2012

சொந்தச்செலவில் குடிநீர்



தேமுதிக சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் என். ஜாகீர் உசேனை ஆதரித்து திருவப்பூர் பகுதியில் பிரசாரம் செய்தார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா.
மக்கள் விரும்பியதால்தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால், அது தவறு என்பதை இந்த ஓராண்டு கால ஆட்சியில் அதிமுக நிரூபித்துவிட்டது.
புதுக்கோட்டையில் குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது, 5 நாள் 10 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் கிடைக்கும் அவலம் நீடிக்கிறது.
தேதிமுக ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைத்து, தண்ணீர் பிரச்னையை அடியோடு தீர்க்கும். சொந்த செலவில் தினமும் லாரிகள் மூலம் குடிநீர் இலவசமாக அளிக்கப்படும்.என்றார் பிரேமலதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக