//]]>3

திங்கள், 4 ஜூன், 2012

105 ஆண்டுகளுக்கு பின் வானில் நாளை அற்புதம்!



சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நாளை (6) வெள்ளிக்கிரகம் நகருகிறது.
இதனால் சூரியனின் மேல் வெள்ளிக்கிரகம் ஒரு புள்ளி போல் நகர்ந்து செல்வது தெரியும்.
105 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்த காட்சியை சூரிய உதயம் முதல் காலை 10 மணி வரை காணலாம். இந்நிகழ்வை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. பார்த்தால் சூரிய ஒளியால் கண்ணில் பாதிப்பு ஏற்படும். பார்த்தாலும் தெரியாது.
சூரிய ஒளியை சிறு கண்ணாடி மூலம் பிரதிபலித்து வெள்ளைச் சுவரில் பிடித்தால், சூரியன் சுவரில் பளிச்சென்று விழும். அதில் கரும் புள்ளியாய் வெள்ளி நகருவது தெரியும். இம்முறையின்படி பார்க்கலாம்.
இந்நிகழ்வினால் பூமியில் பாதிப்பு ஏற்படாது. உரியினங்களுக்கும் பாதிப்பில்லை என பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக