//]]>3

திங்கள், 4 ஜூன், 2012

சினீமா நகைகளுக்கு போட்டியாக ரீவி.தொகுப்பாளிகள்



தற்போது சினிமா நடிகைகளுக்கு நிகராக கவர்ச்சி ஆடைகளில் கலக்க தொடங்கியிருக்கிறார்கள் தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள்.
பொதுவாக நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு தேர்வு செய்யும் போது அழகான தோற்றம், உச்சரிப்பு, உடை அலங்காரம் இதை எல்லாம் பார்த்துதான் தேர்வு செய்கின்றனர்.
ஆனால் தற்போது தொழில் போட்டி காரணமாக கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்க முனைகிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது.
சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் உடைகளை பார்க்கும் போது, சிறுவர்களுடன் இருந்து குறித்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சங்கடப்படும் அளவுக்கு கவர்ச்சி காணப்படுகிறது.
குறிப்பாக பாடல்களை மட்டுமே ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளை எடுத்துக்கொண்டால் டைட் டி சேர்ட், டைட் லெக்கின்ஸ் இதுதான் உடை என்றாகிவிட்டது.
அதை விட கொடுமை, சிறுவர்களுக்கான தொலைக்காட்சியில் தொகுப்பாளினிகளாக வரும் சிறுமிகளுக்கு கூட நாகரீகமற்ற ஆடைகளை அணிவித்து விடுகிறார்கள்.
இப்பொழுது ஷீ தமிழின் சொல்வதெல்லாம் உண்மை, மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், ஜெயா டிவியில் தேன் கிண்ணம் மற்றும் ஒரு சில சமையல் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள், போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே புடவை கட்டிக்கொண்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பணிபுரிவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
ஆனால் ஆண் தொகுப்பாளர்கள் ரொம்போ ஸ்மார்ட். நீயா நானா, நடந்தது என்ன? நடத்தும் கோபிநாத், சன் டிவியில் டாப் 10 கூறும் விஜயகுமார், பெரும்பாலான செய்தி வாசிப்பாளர்களும் பங்குனி வெயில் பல்லிளித்தாலும் கோட் போட்டுதான் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக