//]]>3

செவ்வாய், 15 மே, 2012

ஆளும், எதிர் தரப்புப் பேச்சுவார்த்தை..




ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று 14ம் திகதி அலரி மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சி குழுவை சந்தித்து நாட்டின் சமகால அரசியல் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. 

இந்த சந்திப்பில் ஐதேக சார்பில் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க ஆகியோரும், 

அரசாங்க தரப்பு சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, டலஸ் அழகப்பெரும நிமல் சிறிபால டி சில்வா, பசில் ராஜபக்ஷ், மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக