மாத்தளை - கவேவெல - தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் ஒரே சூழில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
14 வயதுடைய குறித்த சிறுமி தான் வசிக்கும் பிரதேச இளைஞர் ஒருவருடன் காதல் புரிந்து வந்துள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் அவர்களுடைய காதலுக்கு அனுமதி அளித்ததோடு இவ்விருவரையும் கணவன் - மனைவியாக வாழவும் அனுமதித்துள்ளனர்.
இதன் விளைவாக குறித்த 14 வயது சிறுமி கர்ப்பமாகி கடந்த 8ம் திகதி மாத்தளை வைத்தியசாலையில் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
பிறந்த குழந்தைகள் நிறை குறைவாக இருந்தாலும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் குறித்து கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக