யாழில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றமைக்கு பெற்றோரின் கவமின்மையே முக்கிய காரணமாக இருப்பதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறுவர் பாதுகாப்பு பிரிவினரினால் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்விதம் குறிப்பிட்டார்.
யாழில் பெற்றோர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி விடுகின்றார்கள். தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றது என்பது கூட அவர்களுக்கு தொரியாத நிலையில் அவர்களின் வாழ்க்கை போகிறது.
பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாத பிள்ளைகள் கட்டாக்காலி கால்நடைகளுக்கு சமன். பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் முதன்மையான கடமை அவர்களின் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காத பிள்ளைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறுவர் பாதுகாப்பு பிரிவினரினால் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்விதம் குறிப்பிட்டார்.
யாழில் பெற்றோர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி விடுகின்றார்கள். தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றது என்பது கூட அவர்களுக்கு தொரியாத நிலையில் அவர்களின் வாழ்க்கை போகிறது.
பெற்றோரின் கட்டுப்பாடு இல்லாத பிள்ளைகள் கட்டாக்காலி கால்நடைகளுக்கு சமன். பிள்ளைகளை பாதுகாப்பது பெற்றோரின் முதன்மையான கடமை அவர்களின் எதிர்காலத்தில் நற்பிரஜைகளாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது.
பெற்றோரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்காத பிள்ளைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக