//]]>3

செவ்வாய், 26 ஜூன், 2012

ஆண்மீக பணியில் மணிஷா


தமிழில் முதல்வன், இந்தியன், பாபா, படங்களில் நாயகியாக நடித்தவர் மனிஷா கொய்ரலா, இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தார். மனிஷாவுக்கும் ஆஸ்திரேலிய தூதர் ஒருவருக்கும் காதல் மலர்ந்து சில நாட்களிலேயே பிரிந்தனர்.

பிறகு அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரை காதலித்தார். அதுவும் முறிந்து போனது. கடந்த 2010-ல் நேபாளத்தை சேர்ந்த சாம்ராத் தாஹப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பின் நடிப்பதை நிறுத்தி விட்டார். சந்தோஷமாக இருந்த அவரது குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீச துவங்கி உள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள்.
தற்போது மனிஷாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆன்மீகத்தில் ஈடுபட துவங்கி உள்ளார். தினமும் கோவில் கோவிலாக சென்று சாமி கும்பிடுகிறார். தியான மையங்களுக்கு சென்று தனிமையில் உட்கார்ந்து தியானமும் செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக