//]]>3

புதன், 13 ஜூன், 2012

வசமாக மாட்டிய நித்தியானந்தா


அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்த்தி ராவ் என்பவர், நித்தியானந்தா தன்னை கற்பழித்து விட்டதாக சமீபத்தில் சுவர்ணா கன்னட டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

இதனை மறுத்துள்ள நித்தியானந்தா, ஆர்த்தி ராவுக்கு பால்வினை நோய் உள்ளதாகவும், அப்படிப்பட்டவருடன் நான் எப்படி உறவு வைத்துக் கொள்வேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பால்வினை நோய்களை சாதாரணமாக மூன்றாம் நபரால் அடையாளம் கண்டுவிட முடியாது. இந் நிலையில் ஆச்சிரமத்தில் பணியாற்றிய சிஷ்யைக்கு பால்வினை நோய் இருந்ததை நித்தியானந்தா சுவாமிஜீ எப்படி கண்டறிந்தார்…???
தனது வாயால் நித்தியானந்தா அளித்த இவ் வாக்குமூலம், மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் துருவி துருவி கேட்டதால் தான்,நித்தியானந்தா கேள்வி கேட்ட நிருபரை வெளியேற்றுமாறு தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டதாக விடயமறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக