//]]>3

ஞாயிறு, 20 மே, 2012

யாழில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!


பாழடைந்த கிணறொன்றிலிருந்து ஒரு தொகுதி ஆயுதங்ள் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய்ப் பிரதேசத்தின் வசந்தபுரம் பகுதியிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன்படி மில்லி மீற்றர் 81 ரக மோட்டார் ரவைகள் 18 மற்றும் கைக்குண்டொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக