//]]>3

ஞாயிறு, 20 மே, 2012

பொலிஸ் வலைவீச்சுத் தேடுதல்: 59 பேர் கைது


மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று 19ம் திகதி மாலை 4 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரையான 8 மணிநேரத்தில் பொலிஸார் மேற்கொண்ட வலைவீச்சுத் தேடுதலில் 59 பேர் சிக்கியுள்ளனர். 

இவ்வாறு சிக்கியவர்களில் இராணுவ விட்டோடிகள் 20 பேர், பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 21 பேர், சந்தேகநபர்கள் 8 பேர் தேடப்பட்ட சந்தேகநபர் ஒருவர், வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 8 பேர் மற்றும் துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த ஒருவர் உள்ளடங்குகின்றனர். 

இத்தேடுதல் நடவடிக்கை மாத்தறை மாவட்டத்தின் 14 பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கை செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக