//]]>3

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

உதயசூசரியன் விளையாட்டுக் கழகத்துக்கு புதிய மைதானம்




உரும்பிராய் தெற்கு செல்வபுரம் உதயசூசரியன் விளையாட்டுக் கழகத்துக்கு மைதானம் ஒன்றை பெற்றுத்தெருவதாகவும் , சகல வசதிகளுடக் கூடிய கலையரங்கினையும் அமைத்துத் தருவதாகவும்   பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சர் டக்கிழஸ் தேவானந்தா  தெரிவித்தார் 

நேற்று ( 21.04.2012 ) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமான உதயசூசரியன் சனசமூக நிலையத்தில் உதயசூசரியன் சனசமூக நிலையமும் மக்கள் கலை இலக்கிய மன்றமும் இணைந்து நடாத்திய கலாச்சார விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார் 

இந்த விழாவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய உதயசூசரியன் விளையாட்டுக் கழகத்துக்கு புதிய மைதானமென்று பெற்றுத்தரப்படும் எனவும் சகல வசதிகளோடு கலையரங்கு அமைத்துத்தரப்படும் எனவும் இக்கிராம மக்களுக்கு 2 மாதங்களுக்குள் தொழில் முயற்சிக்கான வாய்பு செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார் 

தொடர்ந்து இசைஅரங்கம், நாடக அரங்கம், நடன அரங்கம், நாடகமகள் போன்றன நடைபெற்றது 

இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பசுபதி ஜீவரத்தினம் ஈழமக்கள் ஜனனாயகக் முன்னணி கோப்பாய் பொறுப்டபாளர் ஜங்கரன் போன்றவர்கள் கலந்து கொண்டனர் 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக