இன்று சூரியன் நாட்டின் பலபாகங்களிற்கும் மிகவும் அண்மித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
இன்று நண்பகல் 12.13இற்கு நாட்டின் சில பிரதேசங்களிற்கு சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி வக்கடுவ, பெல்மதுளை, யட்டியந்தோட்டை, ராகமை, கொத்மலை, கரவனெல்ல ஆகிய பிரதேசங்களுக்கு சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
இந்நிலைமையானது கடந்த 5ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக