//]]>3

சனி, 7 ஏப்ரல், 2012

வீதி குளமானது



கிளிநொச்சி பாரதிபுரத்திற்கும் அம்பாள் குளத்திற்கும் இடையேயான பிரதான வீதியின் நடுவில் குளம் போன்று பாரிய குழி ஒன்று காணப்படுவதால் இவ்வீதியால் பயணம்செய்ய முடியாதுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் விவேகானந்தா வித்தியாலம் போன்றவற்றிற்கு செல்லும் பிரதான வீதியாகக் இந்த வீதி காணப்படுவதால் வியாபாரிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.
மழை காலங்களில் வீதியில் காணப்படும் பாரிய குழியினுள் நீர் தேங்கி நிற்பதால் பலர் விபத்துக்குள்ளான சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இந்த வீதி தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி விரைவில் வீதியை புனரமைத்துத் தருமாறும் இந்தப் பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக