மெக்சிக்கோவின் கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரக்குகளை ஏற்றிய ட்ரக் வாகனமொன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய பஸ் ஒன்றுடன் மோதியதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மெக்சிக்கோ ஜனாதிபதி தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் நால்வரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுவதுடன், காயமடைந்தவர்களின் விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக