//]]>3

வியாழன், 7 ஜூன், 2012

யாழில் கள்ளச்சாராயம் வித்த நால்வர் கைது



யாழ். நகரப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட நடைபாதை வியாபாரிகள் நால்வர் இன்றைய தினம் யாழ். காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்றுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ். காவற்றுறையினர் சிவில் உடையில் சென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டு
அவர்களிடமிருந்து 20 போத்தல் சாராயமும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்வர்கள் யாழ். காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களிடம் மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இவர்கள் நால்வரும் நாளையதினம் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் எனவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளநர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக