//]]>3

வெள்ளி, 25 மே, 2012

இலங்கைச் சிறுமிகள் சிங்கப்பூரில் விபசாரத்தில்....



சிங்கப்பூரில் இலங்கைப் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரு நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதனையடுத்து இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சிங்கப்பூருக்கு இரு சிறுமிகளையும் அனுப்பி அவர்களை விபசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினர் என இவர்கள் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
களனியைச் சேர்ந்த சரத் எக்க நாயக்க மற்றும் சுகந்தி ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.குறித்த சிறுமிகளுக்கு முதற் கொடுப்பனவாக தலா 25,000 ரூபாவை வழங்கியதுடன் நாளாந்தம் 5000 ரூபாவை வழங்குவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டே இவர்கள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்இதேவேளை, இவ்வாறான விபசார நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோரின் பின்னணியில் ஆளுந்தரப்பு அரசியல் பலம் உள்ளதாகத் தெரிய வருகிறது.
இது இவ்வாறிருக்க, இலங்கை பெண் ஒருவரை மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு தொழிலுக்கு அனுப்புவதாகக் கூறி அந்தப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பிலும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக