//]]>3

சனி, 28 ஏப்ரல், 2012

யாழில் இளம்பெண்ணை அச்சுறுத்திய நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை



யாழ்ப்பாண வீதியில் சென்ற இளம்பெண்ணை அச்சுறுத்தி அவரின் கழுத்தில் தொங்கிய தங்கச் சங்கிலியை அபகரித்த குற்றத்திற்காக “கச்சான் ரவி” என்பவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையை யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராச விதித்து தீர்பளித்துள்ளார்
கடந்த 2009.11.14 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் வைத்து வீதியில் சென்ற இளம் பெண் ஒருவரை அச்சுறுத்தி அவரிடமிருந்த 55,000 ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியை அபகரித்துள்ளார்
இவர் பல குற்றச் செயல்கள் தொடர்பாக யாழ்.சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில் சிறையிலிருந்து விடுதலையான கையோடு பெண்ணை அச்சுறுத்தி தங்கச் தங்கிலியை அபகரித்துள்ளதாக யாழ்.பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்
யாழ்.பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார்.
பின்னதாக இவர் குற்றவாளி என இனம் காணப்பட்டதை இடுத்து இவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கித் தீர்பளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக