//]]>3

சனி, 28 ஏப்ரல், 2012

சிறையில் இருந்து வந்த 16 நிமிடத்தில் கொள்ளையடித்த அசகாய சூரன்!



சிறைச்சாலை கைதிகளை நல்வழிப்படுத்துகிறதா என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று.
Marcus Hunt என்ற 22 வயது இளைஞன், களவெடுத்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறைக்காலம் முடிவடைந்த வெளியே வந்து 16 நிமிடங்களில் இன்னுமோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெருவில் சென்றுகொண்டிருந்த சைக்கிளோட்டியிடம் இருந்து 190 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சைக்கிளை கொள்ளையடிக்க முயன்றபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இவர், விசாரணைகளின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக