//]]>3

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

நாடு முழுவதும் பொலிஸ் திடீர் தேடுதல்



நாட்டின் பல பாகங்களிலும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். 

இதன்போது பிலியந்தலாவை மடபான பிரதேசத்தில் சட்டவிரோத மது தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நான்கு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். 

சட்டவிரோத தயாரிப்பு மது போத்தல்கள் 945யும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதோடு அதில் 90 போத்தல் கசிப்பும் அடங்குகின்றது. 

மேலும் பன்னல 40ம் ஏக்கர் பகுதியில் சட்டவிரோத மது தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஐந்து சந்தேகநபர்கள் தயாரிக்கப்பட்ட மதுவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் பதுளை - தெம்மோதர பகுதியில் சட்டவிரோத மது தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஒரு சந்தேகநபரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக