//]]>3

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

34 ஆண்டுகளில் ஒரு கிராமம்






சுன்னாகம் கலைவாணி சனசமூக நிலையத்தின் 34ஆவது ஆண்டு விழாவும், பொதுக்கூட்டமும் (07.04.2012)  வெள்ளிக்கிழமை சனசமூக நிலையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது

இந்தப் பொதுக் கூட்டத்தில்  கிராமத்தின் 400 கிலோ மறீற்றர் நீளமான வீதிப்புனரமைப்பு தொடர்பாகவும், பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது.

இந்தச் சனசமூக நிலையத்துடன் இணைந்து செயற்படும் சிறுவர் கழகத்திற்கு பெற்றோர்கள் சிறுவர்களை அனுப்பாதத்ன் காரணமாக 3 வருடங்களாக இயங்கவில்லை எனவும், பெற்றோர்கள் இனிமேலாவது பிள்ளைகளை சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி அவர்களது ஆளமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சிறுவர் மேம்பாட்டு அதிகாரி ந. சந்திரா தெரிவித்தார்.

J \ 196 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த தையல் வேலை தெரிந்த  பயனாளிகள் அனைவருக்கும் 15ஆயிரம் ரூபா பெறுமதியான தையல் இயந்திரங்கள் மாத் மாதம் தவணை அடிப்படையில்   750 ரூபா  வீதம் செலுத்தும் முறையில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்,

செந்தகாணியுள்ளவருக்கு மலசல கூடவசதியும் , மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ்   நாடு முழுவதும் வழங்கப்படவுள்ள 10 இலச்சம் வீட்டுதோட்ட பயனளிகளுக்கு தானியவிதைகளும் மரகன்றுகள்  வழங்கும் திட்டத்தில் இந்தக்  கிராமத்தில் 50பயனாளிகள் கிராமசேவையாளர் ஊடகவும் , 50 பயனாளிகள் சமூர்த்தி திட்டத்தின் மூலமும் பயன்பெறஉள்ளதாகவும், குறிப்பிட்ட கிராமசேவகர் யஜூஜன்  இதன்முதல்கட்டமாக 5 பயனாளிகளுக்கு  தானியவிதைகளும் மரக்கன்றுகள் வளங்கப்பட்டது.

கிராம சங்கத்தின் தலைவி சுரேஸ்குமார்  சிவாஜினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறுவர் நன்நடத்தை அதிகாரி சிவஞானவேல் சிறுவர் மேம்பாட்டு அதிகாரி  சந்திரா சிறுவர் நிகழ்ச்சிதிட்ட உத்தியோகத்தர் நவசீலன், சமூத்திஉத்தியோகத்தர் சிறிஸ்கந்தராஜா ,J/196 கிராம உத்தியோகத்தர் யஜூஜன் என பலர் கலந்து கொண்டனர்

இந்தக் கலைவாணி  சனசமூக நிலையம் 1978.04.08 ஆண்டு உருவாக்கப்பட்டு இந்தப்பிரதேச மக்களின் வளர்ச்சிக்காக சேவையற்றி வருகிறது   விளையாட்டு கழகம் ,  மாலைநேரவகுப்புகள் என்பன நடைபெற்று வருவதுடன்,  இசை, நடன வகுப்புக்களும் இங்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக