//]]>3

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

ஷாருக்கான் என்ன பயங்கர வாதியா



அமெரிக்காவின் யேல் பல்கழைக்கழக அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா சென்றார்.
நியூயோர்க் விமான நிலையத்தில் ஷாருக்கானை அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரித்தனர்.

இதையடுத்து ஷாருக்கான் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் கொதிப்படைந்த இந்திய அரச வட்டாரம் மற்றும் ரசிகர்கள் அமெரிக்காவிற்கு கண்டனங்கள் தெரிவித்தன.

சமுதாயத்தில் பிரபலமான ஒருவரை அவமதித்ததாக அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டினார்கள். இந்நிலையில் ஷாருக்கானிடம் இதுபோல நடந்து கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா நேற்று மன்னிப்புடன் வருத்தம் தெரிவித்தது.

இன்று அமெரிக்கா, ஷாருக்கானை ஒரு பயங்கரவாதி என சந்தேகப்பட்டு விசாரித்ததாக ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

புனே ஜேர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு, அகமதாபாத் 2008 குண்டுவெடிப்பு போன்ற அசம்பாவிதங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ரியாஸ் பட்கல், ஷாருக்கின் தீவிர ரசிகன் ஆவான்.

இவனைப்போன்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த சில பயங்கரவாதிகள் தன்பெயரோடு ஷாருக் பெயரையும் இணைத்துக் கொள்கின்றனர்.

இதன்காரணத்தினால் ஷாருக்கான் என்று தன் பெயரை மாற்றம் செய்து கொண்டு ஒரு பயங்கரவாதி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடந்ததாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக