//]]>3

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

10ம் வகுப்பு மாணவியை கற்பழித்த கும்பல் கைது



ஒடிசா மாநிலத்தில் மாணவி ஒருவர், 9 மாணவர்களால் மாறி மாறி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் குர்கேலா மாவட்டம் கதம்டோலி கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தன்னுடைய உறவினரை பார்க்க தனது தோழிகளுடன் சென்று கொண்டிருந்தார்.


அப்போது திடீரென்று 14-17 வயதுடைய 9 மாணவர்கள் அம்மாணவிகளை வழிமறித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி மட்டும் அகப்பட்டுக்கொண்டாள்.


அவளை மாணவர்கள் ஒன்பது பேரும் மாறி மாறி கற்பழித்து சீரழித்து விட்டு தப்பிச்சென்றனர்.


பின்னர் இதுகுறித்து அம்மாணவி பொலிஸிடம் புகார் அளித்ததையடுத்து, கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் அம்மாநில சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் குறித்து பொலிஸ் சூப்பிரண்டு ஹிமான்சுலால் கூறியதாவது, சம்பவத்தன்று மாணவர்கள் ஆபாச படங்கள் பார்த்ததாகவும் அந்நேரத்தில் மாணவிகள் கடந்து சென்றதால் இந்த சம்பவம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages 381234 »