//]]>3

திங்கள், 16 ஜூலை, 2012

மல்லாவியில் கிணற்றில் வீழ்ந்து கர்ப்பிணி பெண் மரணம்!


முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த இளம் கர்ப்பிணிபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மல்லாவி பாலிநகர் பகுதியைச்சேர்ந்த சதானந்தன் கிரிசாந்தி என்ற இளம் குடும்பப்பெண் கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. ஆறு மாத கர்ப்பிணியாக உள்ள இவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரித்துள்ளனர்.
உறவினர்களின் தகவல் அடிப்படையில் இப்பெண்ணின் துணைவனை காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். இவரின் உடல் இதுவரை கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்படவில்லை.
குறித்த பெண் துணைவருடன் தனிய இருந்த வேளை இவரது உடலம் கிணற்றில் காணப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது இவரது மரணம் தொடர்பில் துணைவன் தனக்கு தெரியாது என்று காவல்துறையினரின் விசாரணைகளின் மூலம் தெரிவித்துள்ளார்.
மரணவிசாரணை அதிகாரி முல்லைத்தீவில் இருப்பதாகவும் நள்ளிரவு 1.00 மணி அளவிலேயே சம்பவ இடத்திற் வருவதாகவும் அதன் பின்னரே உடல் வெளியே எடுப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக