//]]>3

செவ்வாய், 22 மே, 2012

12 ம் வகுப்புத்தேர்வில் பேரறிவாளன், முருகனுக்கு அதிக புள்ளிகள்


ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூவரில் – பேரறிவாளன், முருகன் ஆகியோர் 12வது வகுப்புத் தேர்வில் அதிக புள்ளிகள் எடுத்துள்ளனர்.
பேரறிவாளன், முருகன் ஆகியோர் சிறையில் இருந்து படித்தே 12வகுப்புத் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் பேரறிவாளன் 1200 இற்கு 1096 புள்ளிகள் பெற்றுள்ளார்.
12வகுப்புத் தேர்வு எழுதிய மற்றொருவரான முருகன் 983 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இவர் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள இவர்கள் இருவரும், கடும் மன உளைச்சலுக்கு மத்தியில் அதிகபுள்ளிகளுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அனைவரையும வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக