//]]>3

திங்கள், 23 ஏப்ரல், 2012

இம்சை அரசன் மீண்டும் வருகிறார்


தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவைப் படங்களில் ஒன்றான இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் அடுத்த பாகத்துக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவன் தான் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

இப்போது திரைக்கதை உருவாக்கும் பணியில் சிம்புதேவன் மும்முரமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமலிருக்கும் வடிவேலு, தனது புதிய இன்னிங்ஸை இந்தப் படம் மூலம், அதுவும் நாயகனாகத் தொடங்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் குறித்து சிம்புதேவனும் வடிவேலுவும் சந்தித்துப் பேசியதாகவும், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் தொடர்ச்சியாக ஒரு படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்திய தனது பேட்டியிலும் கூட, இத்தனை மாத இடைவெளிக்குப் பிறகு தான் நடிக்கும் நடிக்கும் புதிய படம் அதிரடியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக