//]]>3

செவ்வாய், 12 ஜூன், 2012

தமிழ் வர்த்தகரிடம் கப்பம் கோரல்

புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட இரு நபர்கள் தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இந்த இரு நபர்களும் லண்டனில் கல்வி பயிலும் குறித்த தமிழ் வர்த்தகரின் மகனின் நண்பர்கள் எனத் தெரிய வந்துள்ளது.




லண்டனில் கல்வி பயிலும் வர்த்தகரின் மகனைக் கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தி அவரிடமிருந்து 50 இலட்சம் ரூபா கப்பம் கோரியமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. புத்தளம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பிரதேசங்க்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.

தமக்கான கப்பப் பணமான 50 லட்ச ரூபாவையும் ஸ்ரேலிங் பவுணாக வழங்குமாறு கோரியுள்ளனர். மேல் மாகாணத்துக்கான பிரதி பொலிஸ் அதிபருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் பெரிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக