யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட உரிமம் பெறாத சகல விடுதிகளும் எதிர்வரும் யூன் மாதம் 18 ஆம் திகதி முதல் மூடப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.
யாழ் மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் இயங்கி வரும் அனைத்து விடுதிகளையும் பதிவு செய்யுமாறு மாநகர சபையினால் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
குறித்த அறிவித்தலின் பின்னர் இன்னமும் பதிவு செய்யப்படாத அல்லது பதிவினை மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்காத சகல விடுதிகளும் மூடப்படவுள்ளதாக மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்து உள்ளுராட்சி சட்டத்திற்கமைவாக உரிமம் பெறாத அனைத்து விடுதிகளும் மூடப்படும் என யாழ் மாநகர சபை முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக