//]]>3

சனி, 14 ஏப்ரல், 2012

இயேசு கிறிஸ்துவின் கல்லறையில் எலும்புகள்


முதலாம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்த ஜெருசலேமில் உள்ள இயேசு கிறிஸ்துவின் கல்லறையில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கடந்த 1980ம் ஆண்டில் முதலாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த இயேசு கிறிஸ்துவின் கல்லறை ஜெருசலேமில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கல்லறையை தோண்டி ஆய்வு மேற்கொள்ள வடக்கு கலிபோர்னியாவின் அகழ்வாராய்ச்சி நிபுணர் ஜேம்ஸ் தபோர், டாக்குமென்ட்ரி சினிமா தயாரிப்பாளர் ஜிம்சாஜேகபோவிக் குழுவினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதற்கு யூதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இதன் முடிவில் இயேசுவின் கல்லறையை தோண்டாமல் கமெராவுடன் கூடிய ரோபோவை கல்லறைக்குள் இறக்கி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி துளைகள் போடப்பட்டு அதன் வழியாக ரோபோக்கள் பூமிக்குள் இறக்கப்பட்டன. அவை புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளன. அதில் எலும்புகள், கல்வெட்டுகள் போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இயேசுவின் எலும்புதானா? என்பது குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக